sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 சூலூர் தாலுகாவில் புதிய உள் வட்டம் உருவாக்கம்

/

 சூலூர் தாலுகாவில் புதிய உள் வட்டம் உருவாக்கம்

 சூலூர் தாலுகாவில் புதிய உள் வட்டம் உருவாக்கம்

 சூலூர் தாலுகாவில் புதிய உள் வட்டம் உருவாக்கம்


ADDED : டிச 23, 2025 05:18 AM

Google News

ADDED : டிச 23, 2025 05:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூலூர்: சூலூர் தாலுகாவில், புதிதாக இருகூர் உள்வட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

சூலூர் தாலுகா கடந்த, 2009ம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்டது. சூலூர், கருமத்தம்பட்டி, செலக்கரச்சல், வாரப்பட்டி உள்ளிட்ட நான்கு உள்வட்டங்கள், 41 வருவாய் கிராமங்கள் உள்ளன. 585.06 சதுர கி.மீ., பரப்பளவு கொண்டது.

வருவாய் கிராமங்களில் வேகமாக அதிகரித்து வந்த மக்கள் தொகையை கருத்தில் கொண்டு, புதிதாக வருவாய் உள்வட்டங்களை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, கோவை மாவட்டத்தில் புதிதாக, ஐந்து உள் வட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. சங்கனூர் உள்வட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு சங்கனூர் கிழக்கு, மேற்கு என உருவாக்கப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் உள்வட்டம் பிரிக்கப்பட்டு, சிறுமுகையும், சிக்தாசம்பாளையத்தை இரண்டாக பிரித்து, டவுன், ரூரல் என, பிரிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், சூலூர் தாலுகாவில் உள்ள, சூலூர் உள்வட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு, இருகூர் உள்வட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இருகூர் உள்வட்டத்தின் கீழ், ஒட்டர்பாளையம், இருகூர், பட்டணம், பீடம் பள்ளி உள்ளிட்ட வருவாய் கிராமங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இருகூரில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் துவக்கப்பட்டு, வருவாய் ஆய்வாளர் நியமிக்கப்பட்டு, செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us