sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 மத்திய நடுநிலைப்பள்ளியில் புதிய நுாலகம் திறப்பு விழா

/

 மத்திய நடுநிலைப்பள்ளியில் புதிய நுாலகம் திறப்பு விழா

 மத்திய நடுநிலைப்பள்ளியில் புதிய நுாலகம் திறப்பு விழா

 மத்திய நடுநிலைப்பள்ளியில் புதிய நுாலகம் திறப்பு விழா


ADDED : நவ 17, 2025 01:06 AM

Google News

ADDED : நவ 17, 2025 01:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை: வால்பாறை அடுத்துள்ளது முடீஸ் மத்திய நடுநிலைப்பள்ளி. இந்தப்பள்ளியில், மாணவர்களின் கல்வித்திறன் மேம்பட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், பள்ளியில் மாணவர்கள் பயன்பாட்டிற்காக புதிய நுாலகம் திறப்பு விழா பள்ளி தலைமை ஆசிரியர் கணேஷ் தலைமையில் நடந்தது.

புதிய நுாலகத்தை எஸ்டேட் பொதுமேலாளர் திம்மையா திறந்து வைத்து பேசும் போது, ''மாணவர்கள் மத்தியில் ஒளிந்திருக்கும் பல்வேறு திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில், பள்ளியில் அவ்வப்போது போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன. மாணவர்கள் மத்தியில் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், பள்ளியில் புதியதாக நுாலகம் துவங்கப்பட்டுள்ளது. அதற்காக தனி வகுப்பறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. அன்றாடம் செய்தித்தாள்களை தவறாமல் படித்து, நாட்டு நடப்புக்களை அறிந்து கொள்ள வேண்டும். மாணவர்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம், நுாலகத்தை நல்ல முறையில் பயன்படுத்தி பொது அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்''என்றார்.

விழாவில் பள்ளிக்குழு செயலாளர் ஜான்சன், தொழிற்சாலை அதிகாரி நடராஜ், பி.பி.டி.சி., கணக்காளர் ராஜன், ஆர்.சி., சர்ச் ஆலய பங்கு தந்தை மரியபெணிட்டோ ஆகியோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us