ADDED : நவ 24, 2025 06:04 AM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலையை ஒப்பிடுகையில், எவ்வித மாற்றமும் கிடையாது.
ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது: இந்த வாரம், நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீர் விலை, கடந்த வார விலையை ஒப்பிடுகையில், எவ்வித மாற்றமும் இன்றி, 29 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ஒரு டன் இளநீரின் விலை, 12,500 ரூபாய். தேங்காய் விலையுடன் ஒப்பிடுகையில் இளநீர் விலை மிகக் குறைவாக உள்ளது. வழக்கமாக, தேங்காய் விலையை விட இளநீர் விலை கூடுதலாகவே இருக்கும்.
எனவே, குறிப்பிடப்பட்டுள்ள விலையை விட இளநீர் விலையை குறைத்து நிர்ணயம் செய்தால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படும். சிவப்பு இளநீரின் வரத்து மிகக் குறைந்து காணப்படுகிறது.
இனிவரும் நாட்களில், சிவப்பு மற்றும் பச்சை இளநீரின் வரத்து மேலும் குறைய வாய்ப்புள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

