ADDED : டிச 22, 2025 05:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி: பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலையை ஒப்பிடுகையில், 23 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:
இந்த வாரம், நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீர் விலை, 23 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ஒரு டன் இளநீரின் விலை, 10,000 ரூபாய். வரக்கூடிய நாட்களில் இளநீர் வரத்து கணிசமாக குறைய உள்ளது. எனவே ஆங்கில புத்தாண்டில் இருந்து, இளநீர் விலை உயரத்தொடங்கும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

