sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இரண்டு மாதமாக சம்பளம் இல்லை; சுகாதார ஒருங்கிணைப்பாளர்கள் தவிப்பு

/

இரண்டு மாதமாக சம்பளம் இல்லை; சுகாதார ஒருங்கிணைப்பாளர்கள் தவிப்பு

இரண்டு மாதமாக சம்பளம் இல்லை; சுகாதார ஒருங்கிணைப்பாளர்கள் தவிப்பு

இரண்டு மாதமாக சம்பளம் இல்லை; சுகாதார ஒருங்கிணைப்பாளர்கள் தவிப்பு


ADDED : மார் 18, 2025 11:19 PM

Google News

ADDED : மார் 18, 2025 11:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவில்பாளையம்; சுகாதாரத் திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு சம்பளம் வழங்காததால் தவிக்கின்றனர்.

தமிழகத்தில், 2001ம் ஆண்டு அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் சுகாதார திட்டம் துவக்கப்பட்டது. பின், முழு சுகாதார திட்டம் என மாற்றப்பட்டது.

இதில், 25 ஊராட்சிகளுக்கு உட்பட்ட ஒன்றியங்களில் தலா ஒரு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளரும், அதற்கு மேல் ஊராட்சிகள் உள்ள ஒன்றியங்களில் இரண்டு ஒருங்கிணைப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர்.

மாதம் 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் 10ம் தேதிக்குள் சம்பளம் வழங்கப்பட்டு விடும்.

ஆனால், தற்போது ஜனவரி, பிப்ரவரி மாத சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.

சுகாதாரத் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சிலர் கூறுகையில், 'கடந்த டிசம்பர் மாதம் சம்பளம் வழங்கும் முறை ஊராட்சி ஒன்றியத்திலிருந்து கருவூல முறைக்கு மாற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஜனவரி, பிப்ரவரி ஆகிய இரண்டு மாதங்களுக்கான சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை.

மார்ச் மாதத்திலும் 18 நாட்கள் ஆகிவிட்டன. இதனால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளோம்.

அரசு விரைவில் எங்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்' என்றனர்.






      Dinamalar
      Follow us