sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இப்போதைக்கு இல்ல! கைவிரித்தது பாலக்காடு கோட்ட நிர்வாகம்; ரயில் பயணியர் நலச்சங்கத்தினர் அதிருப்தி

/

இப்போதைக்கு இல்ல! கைவிரித்தது பாலக்காடு கோட்ட நிர்வாகம்; ரயில் பயணியர் நலச்சங்கத்தினர் அதிருப்தி

இப்போதைக்கு இல்ல! கைவிரித்தது பாலக்காடு கோட்ட நிர்வாகம்; ரயில் பயணியர் நலச்சங்கத்தினர் அதிருப்தி

இப்போதைக்கு இல்ல! கைவிரித்தது பாலக்காடு கோட்ட நிர்வாகம்; ரயில் பயணியர் நலச்சங்கத்தினர் அதிருப்தி


ADDED : அக் 18, 2024 10:37 PM

Google News

ADDED : அக் 18, 2024 10:37 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி : பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில் மூடிய முன்பதிவு மையத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும், என, பாலக்காடு கோட்ட மேலாளரிடம் மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில் இருந்த, இரண்டு கவுன்டர்களில் முன்பதிவு கவுன்டர் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, கடந்த, 2ம் தேதி மூடப்பட்டது. அனைத்து விதமான டிக்கெட்டுகள் பதிவு, டிக்கெட் விற்பனை என அனைத்தும், ஒரு கவுன்டரிலேயே மேற்கொள்வதால் பயணியர் அதிருப்தி அடைந்தனர்.

ரயில்வே நிர்வாகத்தின் இச்செயலுக்கு, பயணியர் நலச்சங்கம், அரசியல் சமூக இயக்கங்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

காரணம் சொல்லறாங்க


அதில், பொள்ளாச்சி ரயில் பயணியர் நலச்சங்கத்தினர், பாலக்காடு கோட்ட ரயில்வே அதிகாரிகளுக்கு மனு அனுப்பி, மூடப்பட்ட கவுன்டரை திறக்க வலியுறுத்தினர். அதற்கு பாலக்காடு ரயில்வே கோட்டம் அனுப்பிய பதிலில், 'முன்பதிவு மையங்களில், ஒரு ஷிப்ட்க்கு குறைந்த பட்சம், 140 முன்பதிவு படிவங்கள் வர வேண்டும். ஆனால், பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் ஒரு ஷிப்ட்க்கு சராசரியாக, 80 படிவங்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன.

இதை கருத்தில் கொண்டு, ஒருங்கிணைந்த கவுன்டராக மாற்றப்பட்டுள்ளது. எனவே, இங்குள்ள ஒரு, கவுன்டர் காலை, 5:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை செயல்படும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.

தட்கல் டிக்கெட் உட்பட, காலை 8:00 மணி முதல் இரவு, 7:00 மணி வரை முன்பதிவு டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன. அது மட்டுமின்றி, 'யுடிஎஸ்' டிக்கெட் வழங்க பொள்ளாச்சி 'ஏடிவிஎம்' கவுன்டரும் செயல்படுகிறது.

பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில், தற்போது அம்ரித் பாரத் ரயில் நிலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் முடிந்து, புதிய ரயில்களை அறிமுகப்படுத்தியதும், அதற்கு இடமளிக்கும் வகையில் எங்களது செயல்பாடுகளை மறு மதிப்பீடு செய்து செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும்,' என பதில் அளித்துள்ளது. இதனால், ரயில் பயணியர் அதிருப்தி அடைந்தனர்.

ரயில் பயணியர் கூறுகையில், 'பாலக்காடு கோட்டத்தில், பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனின் முக்கியத்துவத்தை குறைக்கும் செயலாக, முன்பதிவு மையத்தை மூடியதை பார்க்க முடிகிறது. ஒவ்வொரு உரிமையும் பறித்து அதற்குரிய விளக்கத்தை மட்டுமே கொடுக்கிறது. எனவே, இனி காலம் தாழ்த்தாமல் உடனடியாக பொள்ளாச்சியை, சேலம் அல்லது மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டும்,' என்றனர்.

கூடுதலாக ஒரு இயந்திரம்!

பொள்ளாச்சியில் முன்பதிவு மையத்தை மூடிய நிலையில், திடீரென முன்பதிவில்லா டிக்கெட் வழங்க வென்டிங் இயந்திரம் ஒன்று கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒரு இயந்திரம் செயல்படும் சூழலில், கூடுதலாக மற்றொரு இயந்திரத்தை நிறுவி பாலக்காடு கோட்ட நிர்வாகம், எதிர்ப்பை சமாளிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த இயந்திரம் இயக்க ஆட்கள் நியமித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது.



பிரத்யேக முன்பதிவு மையம் தேவை!

பாலக்காடு கோட்ட மேலாளர் அருண்குமார் சதுர்வேதி, பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில் நடக்கும் பணியை பார்வையிட்டார். அவரிடம், பொள்ளாச்சி ரயில் பயணியர் நலச்சங்கத்தின் தலைவர் பாலகிருஷ்ணன், முன்னாள் ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் ஜோதிமணி ஆகியோர், பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில் சில நாட்கள் முன்பு வரை இயங்கிய பிரத்யேக முன்பதிவு மையத்தை திறக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.அதற்கு அதிகாரிகள், 'பொள்ளாச்சி ரயில் நிலைய மறு சீரமைப்பு பணிகள் முடிந்த பின், பிரத்யேக முன்பதிவு மையம் திறக்க நடவடிக்கை எடுப்பதாக விளக்கம் அளித்தனர். அதுவரை, முன்பதிவில்லா பயண சீட்டு வழங்க, டிக்கெட் வழங்கும், இரண்டு 'வென்டிங் மிஷின்' இயங்கும் என்றும், ஒரு 'கவுன்டரில்' முன்பதிவு, முன்பதிவில்லா சீட்டுகள் வழங்கப்படும்,' என்றனர்.








      Dinamalar
      Follow us