/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பழைய ஓய்வூதிய திட்டம்: வி.ஏ.ஓ.,க்கள் எதிர்பார்ப்பு
/
பழைய ஓய்வூதிய திட்டம்: வி.ஏ.ஓ.,க்கள் எதிர்பார்ப்பு
பழைய ஓய்வூதிய திட்டம்: வி.ஏ.ஓ.,க்கள் எதிர்பார்ப்பு
பழைய ஓய்வூதிய திட்டம்: வி.ஏ.ஓ.,க்கள் எதிர்பார்ப்பு
ADDED : பிப் 09, 2026 06:17 AM
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின் திருப்பூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் பல்லடத்தில் நடந்தது. அதன் தலைவர் பால்வாசகம் தலைமை வகித்தார். பல்லடம் வட்ட தலைவர் குணசேகரன் வரவேற்றார்.
மாநில துணைத்தலைவர் செல்வகுமார், மாநில அமைப்பு செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சுந்தர பாண்டியன் செயல் அறிக்கையை தாக்கல் செய்தார்.
பிப்., 14ல் நீலகிரியில் நடக்கும் மாநில பொதுக் குழுவில் பங்கேற்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பில் தொடர்வது, பொது கலந்தாய்வு, மாவட்ட ஒரு வழி மாறுதல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- நமது நிருபர் -:

