sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கலெக்டரிடம் 'பழசுக்கு புதுசு' கேட்டு மூதாட்டி கோரிக்கை

/

கலெக்டரிடம் 'பழசுக்கு புதுசு' கேட்டு மூதாட்டி கோரிக்கை

கலெக்டரிடம் 'பழசுக்கு புதுசு' கேட்டு மூதாட்டி கோரிக்கை

கலெக்டரிடம் 'பழசுக்கு புதுசு' கேட்டு மூதாட்டி கோரிக்கை

1


ADDED : ஜூன் 30, 2025 11:25 PM

Google News

ADDED : ஜூன் 30, 2025 11:25 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவை உப்பிலிபாளையத்தை சேர்ந்தவர் தங்கமணி,78. இவர் செல்லாத ஆயிரம் ரூபாய் நோட்டு மற்றும், 500 ரூபாய் நோட்டுகளுடன், கலெக்டர் அலுவலகம் வந்து மனு அளித்தார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: என் மகன் லாரி டிரைவராக பணிபுரிந்தார். கடந்த மூன்றாண்டுக்கு முன்பு இறந்து விட்டார். சமீபத்தில் வீட்டை சுத்தம் செய்த போது, அவர் வைத்திருந்த பேக்கில் பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் இருந்தன.

மத்திய அரசு, செல்லாது என அறிவித்தது. ஆனால் இதில் 15,000 ரூபாய் உள்ளது.

இந்த பணத்தை மாற்றித்தருமாறு, கலெக்டரிடம் நான்கு முறை புகார் மனு கொடுத்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

என் கணவர் சில ஆண்டுகளுக்கு முன், இறந்து விட்டார். எனது ஒரே வாரிசான மகனும் இறந்து விட்டார். எந்த ஆதரவும் இல்லாமல் இருக்கும் எனக்கு, இந்த பணத்தை மாற்றி கொடுத்தால் உதவியாக இருக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.

உடனே, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளரை அழைத்த கலெக்டர், ஏழை பாட்டிக்கு தகுந்த உதவிகளை செய்ய உத்தரவிட்டார்.

இதையடுத்து, வங்கி மேலாளர்கள் பாட்டியிடம் பல்வேறு தகவல்களை கேட்டு பெற்றனர். ஆவண செய்வதாக உறுதியளித்தனர்.






      Dinamalar
      Follow us