ADDED : பிப் 14, 2024 11:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு - கிணத்துக்கடவு, கோவில்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே, பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தை சேர்ந்த செந்தில்குமார், 45, கூலி தொழிலாளி, நடந்து சென்றார். அப்போது, அடையாளம் தெரியாத நபர் எதிர் திசையில் வேகமாகவும், அஜாக்கிரதையாகவும், கார் ஒட்டி வந்து செந்தில்குமார் மீது மோதி விபத்து ஏற்படுத்தினார்.
இதில், படுகாயம் அடைந்த செந்தில்குமாரை மீட்டு, பொள்ளாச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். விபத்து குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

