ADDED : மார் 17, 2025 12:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு அருகே, கோதவாடி பிரிவில் ரோட்டை கடக்க முயன்றவர் மீது, நான்கு சக்கர வாகனம் மோதியதில் பலியானார்.
கிணத்துக்கடவு, கோதவாடி பிரிவு அருகே அடையாளம் தெரியாத, 45 வயது மதிக்கத்தக்கவர் ரோட்டை கடந்த போது, பொள்ளாச்சி நோக்கி சென்ற அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் மோதியது. விபத்து ஏற்படுத்திய வாகனம் நிற்காமல் சென்றது. விபத்தில் காயமடைந்தவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து, கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்தும், இறந்தவர்கள் குறித்தும் விசாரிக்கின்றனர்.