sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நகராட்சியுடன் ஊராட்சிகளை இணைப்பதற்கு... எதிர்ப்பு வலுக்கிறது! 3 கிராம மக்கள் சப்-கலெக்டரிடம் கோரிக்கை

/

நகராட்சியுடன் ஊராட்சிகளை இணைப்பதற்கு... எதிர்ப்பு வலுக்கிறது! 3 கிராம மக்கள் சப்-கலெக்டரிடம் கோரிக்கை

நகராட்சியுடன் ஊராட்சிகளை இணைப்பதற்கு... எதிர்ப்பு வலுக்கிறது! 3 கிராம மக்கள் சப்-கலெக்டரிடம் கோரிக்கை

நகராட்சியுடன் ஊராட்சிகளை இணைப்பதற்கு... எதிர்ப்பு வலுக்கிறது! 3 கிராம மக்கள் சப்-கலெக்டரிடம் கோரிக்கை


ADDED : ஜன 28, 2025 07:10 AM

Google News

ADDED : ஜன 28, 2025 07:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சியுடன் ஊராட்சியை இணைக்கக் கூடாது என, சின்னாம்பாளையம், மாக்கினாம்பட்டி, புளியம்பட்டி கிராம மக்கள், சப்-கலெக்டர் அலுவலகத்தில் ஒன்று கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பொள்ளாச்சி நகராட்சி மொத்தம், 13.87 சதுர கி.மீ., பரப்பு கொண்டது. கடந்த, 1983 ஏப்.,1 முதல் சிறப்பு நிலை நகராட்சியாகவும் செயல்படுகிறது. இந்நிலையில், எல்லை விரிவாக்கம் செய்யும் வகையில், ஜமீன் முத்துார், புளியம்பட்டி, ஆச்சிப்பட்டி, சின்னாம்பாளையம், மாக்கினாம்பட்டி, ஊஞ்சவேலாம்பட்டி, தாளக்கரை, கிட்ட சூராம்பாளையம் ஆகிய ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதில், சின்னாம்பாளையம், மாக்கினாம்பட்டி, புளியம்பட்டி, கிட்டசூராம்பாளையம், ஆச்சிப்பட்டி ஆகிய ஐந்து ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்க, அரசாணை வெளியிடப்பட்டது.

ஆனால், ஊராட்சிகளில் விவசாயம் சார்ந்த தொழில்கள் நசுக்கப்படும், தேசிய வேலை உறுதி திட்ட வேலைவாய்ப்பு பறிபோகும், வரிஉயர்வால் மக்கள் பாதிப்படைவர் என்ற காரணங்களை சுட்டிக் காட்டி கிராம மக்கள், நகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கிராம சபை தீர்மானம்


குடியரசு தினத்தை முன்னிட்டு நடந்த கிராம சபை கூட்டத்தில், நகராட்சியுடன் ஊராட்சியை இணைக்கக் கூடாது; தொடர்ந்து, ஊராட்சியாகவே செயல்பட வேண்டும் என, சின்னாம்பாளையம், மாக்கினாம்பட்டி, புளியம்பட்டி ஊராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று, சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்தின்போது, சின்னாம்பாளையம், மாக்கினாம்பட்டி, புளியம்பட்டி கிராம மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக, சப்-கலெக்டர் கேத்தரின் சரண்யாவிடம் மனு கொடுத்தனர்.

மக்கள் பாதிப்பர்


* சின்னாம்பாளையம் குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பு மற்றும் அனைத்து அரசியல் கட்சி சார்பில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:

சின்னாம்பாளையம் ஊராட்சி, 12 வார்டுகளை உள்ளடக்கியுள்ளது. இப்பகுதியில், ஏழை எளிய மக்கள், விவசாயம் சார்ந்த மக்கள் என, பொருளாதாரத்தில் பின் தங்கியோர் அதிகம் உள்ளனர்.

சாலை, வடிகால், குடிநீர், சுகாதாரம் போன்ற அடிப்படை தேவைகள், முழுமை பெறாமல் உள்ளது. அதேநேரம், தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், மத்திய, மாநில அரசுகளில் இலவச வீடு கட்டும் திட்டம் போன்றவற்றால் மக்கள் பயனடைந்து வருகின்றனர். நகராட்சியுடன் ஊராட்சியை இணைக்கும் பட்சத்தில், இத்திட்டங்கள் கிடைக்கப் பெறாது.

அதேபோல, சிறுகுறு தொழில் செய்வோர், வணிகக் கடைக்காரர்கள் பலரும், தொழில்வரி, குடிநீர் வரி, சொத்துவரி, வீட்டு வரி உயர்வால் பாதிக்கப்படுவர். நகராட்சிக்கு உண்டான உள்கட்டமைப்பு வசதிகள் அமைத்து தரும் வரை, வரிகள் உயர்த்தப்படாது என்ற அரசின் அறிவிப்பும் கிடையாது. எனவே, ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

வரி உயரும்


* மாக்கினாம்பட்டி ஊராட்சி மக்கள்: மாக்கினாம்பட்டி ஊராட்சியில், 2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புப்படி, 8,134 பேர் உள்ளனர். பெரும்பாலானவர்கள், ஏழ்மை நிலையிலும், தினக்கூலி தொழிலாளர்களாகவும் உள்ளனர். ஊராட்சியின் மொத்த நிலப்பரப்பில் 35 சதவீதம், விளை நிலங்களாக உள்ளது. நகராட்சியுடன் ஊராட்சியை இணைத்தால் வரிஇனங்கள் உயர்த்தப்படும். மக்கள் மற்றும் விவசாயிகள் பாதிப்படைவர்.

சிக்கல் ஏற்படும்


* புளியம்பட்டி ஊராட்சி மக்கள்: ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், 50 சதவீதத்தினர் ஏழை எளிய மக்களாக உள்ளனர். தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தால் பயனடைந்து வருகின்றனர். நகராட்சியுடன் ஊராட்சியை இணைத்தால், இத்திட்டம் மக்களைச் சென்றடையாது. அதேபோல, வரியினங்கள் உயர்ந்தால் மக்கள் பாதிப்படைவர். ஊராட்சிக்கு கிடைப்பதுபோல, அரசின் திட்டங்கள் இப்பகுதிக்கு வந்தடைவதில் சிக்கல் ஏற்படும்.

இவ்வாறு, மனுக்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us