sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பாலிசிதாரருக்கு இழப்பீடு தர உத்தரவு

/

பாலிசிதாரருக்கு இழப்பீடு தர உத்தரவு

பாலிசிதாரருக்கு இழப்பீடு தர உத்தரவு

பாலிசிதாரருக்கு இழப்பீடு தர உத்தரவு


ADDED : டிச 25, 2024 11:41 PM

Google News

ADDED : டிச 25, 2024 11:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; இன்சூரன்ஸ் பாலிசியை ரத்து செய்ய மறுத்ததால், பாலிசிதாரருக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.

கோவை, சவுரிபாளையம், மீனா எஸ்டேட் பகுதியை சேர்ந்த தில்லை ராஜன், 'மேக்ஸ்லைப் இன்சூரன்ஸ்' நிறுவனத்தில் பாலிசிதாரராக சேர்ந்து, பிரீமியம் செலுத்தி வந்தார்.

பாலிசி பலன்களை அவருக்கு திருப்பி அளிக்கவில்லை. இதனால் பாலிசியை ரத்து செய்து, ஏற்கனவே செலுத்திய தொகையை, திருப்பி தரக்கோரி கடிதம் அனுப்பினார்.

ஆனால், இன்சூரன்ஸ் நிறுவனம், ஐந்தாண்டுகள் முடிந்த பிறகே, பாலிசியை ரத்து செய்து, பணத்தை திரும்ப பெற முடியும் என்று தெரிவித்தனர்.

இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.

விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், 'இன்சூரன்ஸ் நிறுவனம் சேவை குறைபாடு செய்துள்ளதால், மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக, ஒரு லட்சம் ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us