sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வயிற்றுவலியால் பாதித்த பெண்ணுக்கு இழப்பீடு தர உத்தரவு

/

வயிற்றுவலியால் பாதித்த பெண்ணுக்கு இழப்பீடு தர உத்தரவு

வயிற்றுவலியால் பாதித்த பெண்ணுக்கு இழப்பீடு தர உத்தரவு

வயிற்றுவலியால் பாதித்த பெண்ணுக்கு இழப்பீடு தர உத்தரவு


ADDED : நவ 09, 2024 12:13 AM

Google News

ADDED : நவ 09, 2024 12:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவ காப்பீடு 'கிளைம்' தொகை தர மறுத்ததால், இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.

கோவை அருகேயுள்ள தேவராயபுரம், புள்ளகவுண்டன் புதுாரை சேர்ந்தவர் மகேஸ்வரி,41;இவர், ஸ்டார் ெஹல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தில், கடந்த 2015, டிச., முதல் மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர்ந்தார். கர்ப்பமாக இருந்த காலத்தில் வயிறு வலி ஏற்பட்டதால், அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஒரு வாரம் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பிறகு மருத்துவ சிகிச்சைக்கான செலவுதொகை 1.34 லட்சம் ரூபாய்க்கு 'கிளைம்'கோரி விண்ணப்பித்தார்.

ஆனால், இன்சூரன்ஸ் நிறுவனம், வயிற்று வலி நோய்க்கு மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறி பணம் வழங்க மறுத்தனர். இதனால் பாதிக்கப்பட்ட மகேஸ்வரி இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.

விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், இன்சூரன்ஸ் நிறுவனம் சேவை குறைபாடு செய்துள்ளதால், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவ சிகிச்சைக்கான செலவு தொகை 1.30 லட்சம் ரூபாய் திருப்பி தருவதோடு, மன உளைச்சலுக்கு இழப்பீடு மற்றும் செலவு தொகை, 15,000 ரூபாய் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us