sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பராமரிப்பின்றி வீணாகும் பயணியர் நிழற்கூரை

/

பராமரிப்பின்றி வீணாகும் பயணியர் நிழற்கூரை

பராமரிப்பின்றி வீணாகும் பயணியர் நிழற்கூரை

பராமரிப்பின்றி வீணாகும் பயணியர் நிழற்கூரை


ADDED : அக் 05, 2025 11:56 PM

Google News

ADDED : அக் 05, 2025 11:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெகமம்: பொள்ளாச்சி --- பல்லடம் ரோட்டில், நெகமம் அருகே செட்டிகாளிபாளையம் பகுதியில் எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன் தொகுதி நிதியில் கட்டப்பட்ட பயணியர் நிழற்கூரை சுற்று பகுதி முழுவதும் புதர் சூழ்ந்து காட்சியளிக்கிறது. இத்துடன் நிழற்கூரை உள்பகுதி பராமரிப்பின்றி தூசு படிந்து உள்ளது.

இதனால், பயணியர் உபயோகப்படுத்த முடியாத நிலையில் நிழற்கூரை உள்ளது. மேலும், நிழற்கூரை சுவர் முழுக்க போஸ்டர் ஒட்டும் இடமாக மாறியுள்ளது.

பஸ் வரும் வரை மக்கள் காத்திருப்பதற்காக கட்டப்பட்ட நிழற்கூரையை, ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், வீணாகி வருகிறது.

ஊராட்சி நிர்வாகம் நிழற்கூரை சுற்றுப்பகுதியில் உள்ள புதரை அகற்றி, சுவரில் ஒட்டியுள்ள போஸ்டர்களை அகற்றி, சுதப்படுத்தி பராமரிக்க வேண்டும் என, மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us