/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கரணை வெட்டும் மெஷினுக்கு காப்புரிமை
/
கரணை வெட்டும் மெஷினுக்கு காப்புரிமை
ADDED : பிப் 20, 2026 04:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி: கரும்பு சாகுபடியில், ஒருபரு கரணை வெட்டும் இயந்திரத்துக்கு வேளாண் பல்கலை காப்புரிமை பெற்றுள்ளது.
கரும்பு கரணை வெட்ட கத்தியைப் பயன்படுத்தும்போது, கணிசமான அளவு கரணைகளின் கணுக்கள் சேதமடைகின்றன. இப்பணிக்கு அதிக நேரம், செலவாகிறது.இப்பிரச்னைக்கு தீர்வாக, இயந்திரத்தால் இயங்கும் ஒரு பரு கரணை வெட்டும் இயந்திரத்தை வேளாண் பல்கலை வடிவமைத்தது.
இதில்,முளைப்புத் திறன்,95 சதவீதம் இருக்கும். இந்த இயந்திரத்தைப் பயன்படுத்துவதால் நேரமும்,செலவும் 50 சதவீதத்துக்கு மேல் குறைகிறது.இக்கருவிக்கான காப்புரிமையை இந்திய அறிவுசார் சொத்து அலுவலகம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கு வழங்கியுள்ளது.

