sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பட்டா மாறுதலுக்கு படாதபாடு: நடையாய் நடக்கும் பொதுமக்கள்

/

பட்டா மாறுதலுக்கு படாதபாடு: நடையாய் நடக்கும் பொதுமக்கள்

பட்டா மாறுதலுக்கு படாதபாடு: நடையாய் நடக்கும் பொதுமக்கள்

பட்டா மாறுதலுக்கு படாதபாடு: நடையாய் நடக்கும் பொதுமக்கள்

7


ADDED : ஆக 23, 2025 11:59 PM

Google News

ADDED : ஆக 23, 2025 11:59 PM

7


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : நிலம், வீடு விற்பனை, இறப்பு, தானம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக, பட்டா பெயர் மாற்றம் செய்ய மக்கள் விண்ணப்பிக்கின்றனர். இதற்கு முன் காகித ஆவணமாக வழங்கப்பட்ட பட்டா, தற்போது டிஜிட்டல் முறையில் இ-பட்டாவாக வழங்கப்படுகிறது. விண்ணப்பத்துடன் பட்டா, சிட்டா, அடங்கல், எப்.எம்.பி., ஸ்கெட்ச் உள்ளிட்டவற்றை, ஸ்கேன் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

ஆவணங்கள் சரியாக இருந்தால், முதலாவதாக, கிராம நிர்வாக அலுவலர், இரண்டாவதாக வருவாய் ஆய்வாளர் சரிபார்த்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். பின், துணை தாசில்தார் மற்றும் சர்வேயர் ஒப்புதல் அளித்ததும், பட்டா மாறுதல் உத்தரவை தாசில்தார் வழங்குவது வழக்கம்.

கோவை மாவட்டத்தில் உள்ள வருவாய்த்துறை அலுவலகங்களில் விண்ணப்பிக்கும் மக்களுக்கு, குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் பட்டா மாறுதல் செய்து வழங்கப்படுவதில்லை. விண்ணப்பதாரர்கள் நடையாய் நடக்கின்றனர்.

அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தாலும் ஒப்புதல் அளிக்காமல், கிடப்பில் போடுகின்றனர் அல்லது நிராகரித்து விடுகின்றனர். மீண்டும் விண்ணப்பித்து, ஒவ்வொரு அதிகாரியையும் கவனித்த பிறகே பட்டா மாறுதல் வழங்கப்படுவதாக, அவர்கள் குமுறுகின்றனர்.

ஜமாபந்தி நடத்தியும் கூட, இப்பிரச்னை தொடர்வதால், நிரந்தர தீர்வு காண கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us