sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அணிவகுக்கும் மயில்கள்; கவலையில் விவசாயிகள்

/

அணிவகுக்கும் மயில்கள்; கவலையில் விவசாயிகள்

அணிவகுக்கும் மயில்கள்; கவலையில் விவசாயிகள்

அணிவகுக்கும் மயில்கள்; கவலையில் விவசாயிகள்


ADDED : ஏப் 29, 2025 09:25 PM

Google News

ADDED : ஏப் 29, 2025 09:25 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி; பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில், விளைநிலங்களுக்கு படையெடுக்கும் மயில்களை கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில், புதர்கள் மற்றும் மலைப்பகுதிகளில், மயில்கள் அதிகம் இருந்தன. சமீப காலமாக, புதர்கள் அழிக்கப்பட்டு வருவதால், வாழ்விடங்களை இழந்த மயில்கள், விவசாய விளை நிலங்களில் தஞ்சமடைந்துள்ளன.

விளைநிலங்களில் பயிரிடப்படும் நெற்பயிர், மக்காச்சோளம், கீரை, தானியங்கள், காய்கறி பயிர்களை மயில்கள் உட்கொள்கின்றன. இதனால், விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர். மயில்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியாததால், விரக்தியடைந்துள்ளனர்.

விவசாயிகள் கூறியதாவது:

விவசாய பயிர்களை, காட்டுப்பன்றிகள், மயிர்கள் அதிகளவில் சேதப்படுத்துகின்றன. இதனால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண அரசு முன்வர வேண்டும்.

விளைநிலங்களுக்குள் சுற்றித்திரியும் மயில்கள் குறித்து கணக்கெடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு பாதிப்பின்றி, அவற்றை பாதுகாக்க, வன உயிரின ஆர்வலர்கள், வனத்துறை அதிகாரிகளோடு ஆலோசித்து தீர்வை காண வேண்டும்.

இவ்வாறு, கூறினர்.






      Dinamalar
      Follow us