/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நடந்து சென்றவர் மயங்கி விழுந்து பலி
/
நடந்து சென்றவர் மயங்கி விழுந்து பலி
ADDED : ஜன 12, 2026 05:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: காரமடை குமரன் நகரை சேர்ந்தவர் செல்வம், 67. வடவள்ளி, ஆறாவது வீதியில் தங்கியுள்ளார். இவரது மனைவி, மகளுடன் ஆஸ்திரேலியாவில் தங்கியுள்ளார்.
இவர் தினமும் காலை வாக்கிங் செல்வது வழக்கம். நேற்று முன்தினம் காலை 8:30 மணிக்கு வாக்கிங் சென்று கொண்டிருந்தார்.
அப்போது திடீரென மயங்கி விழுந்தார். இதில், அவருக்கு பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அவரது உறவினர் ரங்கநாதன், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

