sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஆள் இறங்கும் குழியில் கழிவுநீர் வெளியேறியதால் அவதி

/

ஆள் இறங்கும் குழியில் கழிவுநீர் வெளியேறியதால் அவதி

ஆள் இறங்கும் குழியில் கழிவுநீர் வெளியேறியதால் அவதி

ஆள் இறங்கும் குழியில் கழிவுநீர் வெளியேறியதால் அவதி


ADDED : செப் 25, 2025 11:53 PM

Google News

ADDED : செப் 25, 2025 11:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி; பொள்ளாச்சி ராஜாமில் ரோட்டில், பாதாளச்சாக்கடை திட்ட ஆள் இறங்கு குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணாததால், வாகன ஓட்டுநர்கள், கடை உரிமையாளர்கள் சிரமப்படுகின்றனர்.

பொள்ளாச்சியில், குடிநீர் வடிகால் வாரியம் வாயிலாக பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் உள்ள ஆள் இறங்கும் குழிகளில் இருந்து அவ்வப்போது கழிவுநீர் வெளியேறி வருகிறது.

இந்நிலையில், ராஜாமில் ரோட்டில் பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழிகளில் இருந்து கழிவுநீர் அதிகளவு வெளியேறி ரோட்டில் சென்றது.

இது குறித்து கவுன்சிலர் ஜேம்ஸ்ராஜா, ''ராஜாமில் ரோடு மோசமாக உள்ளதால் வாகன ஓட்டுநர்கள் சிரமப்படுகின்றனர். இச்சூழலில், பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறுவதால் வாகன ஓட்டுநர்கள் சிரமப்படுகின்றனர்.

இது குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, நகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார்.

சம்பவ இடத்துக்கு வந்த நகர் நல அலுவர் தாமரைக்கண்ணன் மற்றும் அதிகாரிகள், பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறுவதை ஆய்வு செய்தனர். பின்னர், இயந்திரம் வர வைத்து துாய்மைப்படுத்தப்பட்டன.






      Dinamalar
      Follow us