sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கோவிலை கொண்டு வர எதிர்ப்பு; நுழைவுவாயிலில் திரண்ட மக்கள்

/

 அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கோவிலை கொண்டு வர எதிர்ப்பு; நுழைவுவாயிலில் திரண்ட மக்கள்

 அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கோவிலை கொண்டு வர எதிர்ப்பு; நுழைவுவாயிலில் திரண்ட மக்கள்

 அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கோவிலை கொண்டு வர எதிர்ப்பு; நுழைவுவாயிலில் திரண்ட மக்கள்


ADDED : டிச 19, 2025 06:50 AM

Google News

ADDED : டிச 19, 2025 06:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெகமம்: நெகமம் வீரமாச்சியம்மன் கோவில் முன்பாக மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெகமம் வீரமச்சியம்மன் கோவில், 150 ஆண்டுகள் பழமையானது. கோவில் இடத்தில், 4 கடை வாடகைக்கு விடப்பட்டுள்ளது. கோவில் நிர்வாகத்தை கவனித்து வந்த மாரிமுத்து என்பவருக்கும், கோவில் நிர்வாக குழு உறுப்பினர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியது.

இதை தொடர்ந்து, மாரிமுத்து தரப்பில், கோவில் கணக்குகளில் முறைகேடு நடந்துள்ளது. எனவே, கோவிலை ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். கோவில் கணக்குகளை தக்கார் அமைத்து சரிபார்க்க வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதை தொடர்ந்து கோவில் நிர்வாக குழுவினரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற விண்ணப்பித்தனர்.

இந்நிலையில், நேற்று அறநிலையத்துறை அதிகாரிகள் கோவிலுக்கு வருவதாக தகவல் கிடைத்ததால், நூற்றுக்கணக்கான மக்கள், கோவிலுக்குள் அதிகாரிகளை நுழைய விட மாட்டோம் என, வழிமறித்து காத்திருந்தனர். ஆனால், அதிகாரிகள் கோவிலுக்கு வரவில்லை. இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பொதுமக்களிடம் பேச்சு நடத்தி, கலைந்து செல்ல அறிவுறுத்தியதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

மக்கள் கூறியதாவது:

மூன்று தலைமுறைகளாக இந்த கோவிலில் வழிபடுகிறோம். பலருக்கு இது குலதெய்வமாக உள்ளது. இந்நிலையில், தனிநபர் தொடர்ந்த வழக்கு காரணமாக, பிரச்னை பெரிதாகி உள்ளது. இதற்கு நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் ஒன்றிணைந்து வழக்கு தொடர்ந்த போதிலும், அதிகாரிகள் ஒரு தலைப்பட்சமாக செயல்படுகின்றனர்.

இத்தனை காலங்களாக அறநிலையத்துறை உதவிகள் இன்றி கோவிலை நல்ல நிலைக்கு கொண்டு வந்துள்ளோம். தற்போது, அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்பது வருத்தம் அளிக்கிறது.

இவ்வாறு, கூறினர்.






      Dinamalar
      Follow us