sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கிணத்துக்கடவில் தனியார் பஸ்சை நிறுத்திய மக்கள் போலீசார் பேச்சுவார்த்தை

/

கிணத்துக்கடவில் தனியார் பஸ்சை நிறுத்திய மக்கள் போலீசார் பேச்சுவார்த்தை

கிணத்துக்கடவில் தனியார் பஸ்சை நிறுத்திய மக்கள் போலீசார் பேச்சுவார்த்தை

கிணத்துக்கடவில் தனியார் பஸ்சை நிறுத்திய மக்கள் போலீசார் பேச்சுவார்த்தை


ADDED : செப் 05, 2025 09:58 PM

Google News

ADDED : செப் 05, 2025 09:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு,; கிணத்துக்கடவில் தனியார் பஸ் நிற்காது என தெரிவித்ததால், மக்கள் பஸ்சை வழி மறித்தனர்.

பொள்ளாச்சி -- கோவை ரோட்டில், ஏராளமான அரசு மற்றும் தனியார் பஸ்கள் சென்று வருகிறது.

இதில், நேற்று முன் தினம் இரவில் கோவை, உக்கடம் பஸ் ஸ்டாண்டில் இருந்த தனியார் பஸ்சில் கிணத்துக்கடவு செல்ல பயணிகள் ஏறிய போது பஸ் கண்டக்டர், கிணத்துக்கடவு போகாது என கூறி பயணியரை இறங்கச்சொல்லி வலியுறுத்தினார்.

அதற்கு, கிணத்துக்கடவு பகுதியில் ஸ்டேஜ் உள்ளது. எதற்காக பஸ் நிற்காது என கேட்டதற்கு, பஸ் பாலத்தின் மீது சென்று விடும் என பதில் அளித்துள்ளனர்.

இதனால் கண்டக்டர் மற்றும் பயணிகளுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணியர் மாற்று பேருந்தில் பயணித்தனர்.

மேலும், நேற்று காலையில் அதே பஸ், கிணத்துக்கடவு சர்வீஸ் ரோட்டில் வருவதை அறிந்த மக்கள், புது பஸ் ஸ்டாண்ட் முன் நின்று பஸ்சை வழி மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும், இது குறித்து தகவல் அறிந்த கிணத்துக்கடவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.

இது குறித்து மக்கள் கூறியதாவது: பொள்ளாச்சி மற்றும் கோவையில் இருந்து புறப்படும் பஸ்கள் அனைத்தும், கிணத்துக்கடவு வழியாகவே செல்கிறது. ஆனால் கிணத்துக்கடவில் பஸ் நிற்காது என பெரும்பாலான தனியார் பஸ்கள் பயணியரிடம் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்தவித பயனும் இல்லை. மேலும், ஆர்.டி.ஓ., சார்பில் கிணத்துக்கடவு பாலம் ஆரம்பமாகும் இரு இடங்களில் 'அரசு மற்றும் தனியார் பஸ் கிணத்துக்கடவு சர்வீஸ் ரோடு வழியாக சென்று வர வேண்டும்' என அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

இதையெல்லாம் கண்டு கொள்ளாமல், பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் மெத்தனப்போக்கில் செயல்படுகின்றனர்.

இப்பிரச்னை பல ஆண்டுகளாக இருக்கிறது. இதுபோன்று மக்கள் நலனில் அக்கறை காட்டாமல் செல்லும் பஸ்களின் பர்மிட்டுகளை அதிகாரிகள் ரத்து செய்தால், மற்ற அனைத்து பஸ்களும், சரியாக சென்று வரும். எனவே, விதி மீறும் பஸ்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us