/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மக்கள் குறைதீர் கூட்டம் 55 மனுக்களுக்கு தீர்வு
/
மக்கள் குறைதீர் கூட்டம் 55 மனுக்களுக்கு தீர்வு
ADDED : நவ 14, 2024 05:07 AM
கோவை: மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில், 55 மனுக்களுக்கு சுமுக தீர்வு காணப்பட்டது.
பொது மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது விசாரணை மற்றும் ஏற்கனவே எடுக்கப்பட்ட நடவடிக்கை மீது அதிருப்தி உள்ளவர்களின் மனுக்கள் மீதான மறு விசாரணை ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில், கோவை மாவட்ட எஸ்.பி., கார்த்திகேயன் தலைமையில் நடத்தப்படுகிறது.
நேற்று நடந்த குறைதீர் முகாமில் குடும்ப பிரச்னை, பணப்பரிமாற்ற பிரச்னை, இடப்பிரச்னை தொடர்பாக, 63 மனுக்கள் மீது மறு விசாரணை நடத்தப்பட்டது. அதில் 55 மனுக்களுக்கு சம்பந்தப்பட்டவர்களிடம் நேரடியாக பேசி சுமுகமான முறையில் தீர்வு காணப்பட்டது. மேலும் 8 மனுக்களுக்கு மேல் விசாரணை செய்ய பரிந்துரை செய்யப்பட்டது.