sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

உலக தாய்மொழி தின பேரணி துவக்கி வைத்தார் பேரூராதினம்

/

உலக தாய்மொழி தின பேரணி துவக்கி வைத்தார் பேரூராதினம்

உலக தாய்மொழி தின பேரணி துவக்கி வைத்தார் பேரூராதினம்

உலக தாய்மொழி தின பேரணி துவக்கி வைத்தார் பேரூராதினம்


ADDED : பிப் 22, 2024 06:02 AM

Google News

ADDED : பிப் 22, 2024 06:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ் கல்லுாரியின் தமிழ்த்துறை மற்றும் மாவட்ட தமிழ் இலக்கிய, சமுதாய அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில், உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு பேரணி நடந்தது.

காந்திபுரம் அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரி முன் இருந்து, பேரூராதினம் மருதாசல அடிகளார் மற்றும் தஞ்சாவூர் தமிழ் பல்கலை முன்னாள் துணைவேந்தர் சுப்பிரமணியம் பேரணியை துவக்கி வைத்தனர்.

கோவையை சேர்ந்த பல்வேறு கல்லுாரி மாணவர்கள், தமிழ் இலக்கிய அமைப்பினர், தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

'தாய் மொழியே ஆட்சி மொழி, தாய்மொழியே நீதிமன்ற மொழி' என்ற முழக்கங்களுடன் பேரணியில் அனைவரும் பங்கேற்றனர்.

பாரதியார் பல்கலை தமிழ்த்துறை தலைவர் சித்ரா, அனைத்திந்திய தமிழ்ச்சங்க பேரவை நிர்வாகி துரைசாமி, தமிழ் காப்புக்கூட்டியக்கம் தலைவர் அப்பாவு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us