sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பூச்சிக்கொல்லி, உரம் தவிர்க்க வேண்டும்

/

பூச்சிக்கொல்லி, உரம் தவிர்க்க வேண்டும்

பூச்சிக்கொல்லி, உரம் தவிர்க்க வேண்டும்

பூச்சிக்கொல்லி, உரம் தவிர்க்க வேண்டும்


ADDED : செப் 10, 2025 10:21 PM

Google News

ADDED : செப் 10, 2025 10:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; 'ரசாயன பூச்சிக்கொல்லிகள், உரம் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்' என, தோட்டக்கலைத்துறை அறிவுறுத்தியுள்ளது.

விவசாயத்தில் அதிகளவு ரசாயண உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் வேதியியல் உரங்களை பயன்படுத்துவதால், மண் வளம் பாதிக்கப்படுகிறது. விளைபொருட்களின் தரம் குறைகிறது.

தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சித்தார்த்தன் கூறியுள்ளதாவது:

பாரம்பரிய காய்கறி, பழங்கள் விளைவிப்பதால், குறைந்தளவு ரசாயனம் பயன்படுத்த முடியும். குறைந்த செலவில் அதிக உற்பத்தி, நோய் தாக்குதலை கட்டுப்படுத்துதல், மண் வளத்தை காக்க முடியும்.

பசுமை உரம், பஞ்சகவ்யம், ஜீவாமிர்தம், கோமியம், கழிவு உரம் ஆகியவற்றை பயன்படுத்தினால் பயிர்கள் ஆரோக்கியமாக வளரும்.

இது, சுற்றுச்சூழலுக்கும், உடல் நலனுக்கும் ஏற்றது. பூச்சிக்கொல்லிகளின் நச்சுத்தன்மைக்கான அடையாளங்களை கண்டு, அவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us