/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
யானைகள் நடமாட்டம் போலீசுக்கு அறிவுரை
/
யானைகள் நடமாட்டம் போலீசுக்கு அறிவுரை
ADDED : பிப் 07, 2026 05:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்: சின்னதடாகம், நஞ்சுண்டாபுரம், மடத்தூர், வீரபாண்டி, காளையனூர், கணுவாய் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
இவற்றை கட்டுப்படுத்த வேட்டை தடுப்பு காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். தடாகம் போலீசார் இரவு நேரத்தில் ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை, கணுவாய், வரப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். யானை நடமாட்டம் இருப்பதால், இருசக்கர வாகனங்களில் செல்லும் போலீசார் எச்சரிக்கை உணர்வுடன் செல்லும்படி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

