sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஆட மறுத்தவர்களுக்கு 'அடி' நால்வர் மீது போலீஸ் வழக்கு

/

ஆட மறுத்தவர்களுக்கு 'அடி' நால்வர் மீது போலீஸ் வழக்கு

ஆட மறுத்தவர்களுக்கு 'அடி' நால்வர் மீது போலீஸ் வழக்கு

ஆட மறுத்தவர்களுக்கு 'அடி' நால்வர் மீது போலீஸ் வழக்கு


ADDED : ஜன 18, 2025 12:36 AM

Google News

ADDED : ஜன 18, 2025 12:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை,; சீரநாயக்கன்பாளையம் பகுதியில் நடனமாட வர மறுத்த இருவருக்கு, அடி விழுந்தது. தாக்கிய நான்கு பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

கோவை, சீரநாயக்கன்பாளையம், ராஜன் காலனியை சேர்ந்தவர் சசிகுமார், 37. இவர் தனது உறவினர் ஒருவருடன், வீட்டின் அருகில் உள்ள காலி இடத்தில் குப்பை கொட்ட சென்றார்.

அப்போது, அங்கு அதே பகுதியை சேர்ந்த நான்கு பேர், பாட்டுப்போட்டு நடனமாடிக்கொண்டு இருந்தனர். அவர்கள், சசிகுமாரையும் நடனமாட வருமாறு அழைத்தனர்.

சசிகுமார் வீட்டில் வேலை இருப்பதாக கூறினார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த நான்கு பேரும், சசிகுமார் மற்றும் அவருடன் இருந்தவரை சரமாரியாக தாக்கினர்.

சசிக்குமார் ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் பிரகாஷ், மதன், சக்திவேல், ஜெயக்குமார் ஆகியோர் மீது, வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us