/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெண்ணிடம் நகை, பணம் பறிப்பு: போலீஸ் உயரதிகாரி மகன் கைது
/
பெண்ணிடம் நகை, பணம் பறிப்பு: போலீஸ் உயரதிகாரி மகன் கைது
பெண்ணிடம் நகை, பணம் பறிப்பு: போலீஸ் உயரதிகாரி மகன் கைது
பெண்ணிடம் நகை, பணம் பறிப்பு: போலீஸ் உயரதிகாரி மகன் கைது
ADDED : நவ 11, 2025 07:00 AM
கோவை: பொள்ளாச்சியை சேர்ந்த 25 வயது இளம்பெண், கடந்த ஆறு மாதங்களாக பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி, ரேஸ்கோர்ஸில் உள்ள தனியார் நிறுவனத்தில், 'கன்டென்ட் ரைட்டர்' ஆக பணிபுரிந்து வருகிறார். சில வாரங்களுக்கு முன், 'டேட்டிங்' செயலி மூலம், கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த தருண், 28 என்பவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது.
கடந்த, 2ம் தேதி மாலை 6.00 மணிக்கு நேரில் சந்திக்க வேண்டும் என, தருண் செயலி மூலம் தகவல் தெரிவித்தார். இரவு 7.00 மணிக்கு பாப்பநாயக்கன்பாளையத்தில் இருந்து பெண்ணை அழைத்துக் கொண்டு, கோவை க.க.சாவடி பகுதிக்கு சென்றார். அங்குள்ள தனியார் கல்லூரிக்கு அருகில் இருக்கும் குளத்தின் அருகே, வாகனத்தை நிறுத்தி பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது தருண் அவரது நண்பர் தனுஷ், 28க்கு தகவல் தெரிவித்து வரவழைத்தார். இருவரும் பெண்ணைமிரட்டி, தங்கமோதிரம், செயின், பிரேஸ்லெட் என, மூன்று பவுன் நகைகளை பறித்தனர். ரூ.90 ஆயிரத்தை அவரது மொபைல்போனில் இருந்து, யு.பி.ஐ., செயலி மூலம் பறித்துக் கொண்டனர்.
இதுகுறித்த புகாரின் பேரில், ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிந்து தருண் மற்றும் தனுஷ் ஆகியோரை தேடி வந்தனர். இந்நிலையில், தேடப்பட்டு வந்த தனுஷை போலீசார் நேற்று கைது செய்தனர்.
அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தனுஷ், போலீஸ் உயர் அதிகாரி ஒருவரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

