sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

உயிரிழந்த 'டிராபிக்' தாத்தா; போலீசார் அஞ்சலி

/

உயிரிழந்த 'டிராபிக்' தாத்தா; போலீசார் அஞ்சலி

உயிரிழந்த 'டிராபிக்' தாத்தா; போலீசார் அஞ்சலி

உயிரிழந்த 'டிராபிக்' தாத்தா; போலீசார் அஞ்சலி


ADDED : செப் 11, 2025 10:04 PM

Google News

ADDED : செப் 11, 2025 10:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; வாகனங்களில் செல்வோர் உக்கடத்தை கடக்கும்போது, அந்த பெரியவரை பார்க்காதவர்களே இருக்க மாட்டார்கள்.

உக்கடம் பஸ் ஸ்டாண்ட் முன் நின்றுகொண்டு, வாகன நெரிசல் ஏற்படும் சமயங்களில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவார்.

கோவையை சேர்ந்த சுல்தான், 88 என்கிற சமூக ஆர்வலரே அவர். பலரும் அவரை டிராபிக் தாத்தா என, அழைப்பது வாடிக்கை. உக்கடம், கரும்புக்கடை உள்ளிட்ட பகுதிகளில், போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய போலீசாருக்கு உதவுவார்.

வயது மூப்பு காரணமாக, நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார். அப்பகுதி மக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

போக்குவரத்து போலீசார் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் துடியலுாரில் அடக்கம் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us