/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வடமாநில தொழிலாளி சடலத்தை விமானத்தில் அனுப்பியது போலீஸ்
/
வடமாநில தொழிலாளி சடலத்தை விமானத்தில் அனுப்பியது போலீஸ்
வடமாநில தொழிலாளி சடலத்தை விமானத்தில் அனுப்பியது போலீஸ்
வடமாநில தொழிலாளி சடலத்தை விமானத்தில் அனுப்பியது போலீஸ்
ADDED : ஜன 01, 2026 05:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: மேற்கு வங்க மாநிலம் கொல்கட்டாவை சேர்ந்தவர் சுராஜ், 23. இவரை கோவை கரும்புக்கடையை சேர்ந்த பாஷித், 30, அவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ், 38 தாக்கியதில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கைதானவர்களில் ஒருவர் ஊர்காவல்படையில் இருந்து நீக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உயிரிழந்த சுராஜ்ஜின் சடலம் அவசர கதியில் பிரேதப்பரிசோதனை செய்யப்பட்டு, நேற்று விமானம் மூலம் அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தங்களது சொந்த செலவில் போலீசார் விமானத்தில் சடலத்தை அனுப்பி வைத்துள்ளது தெரியவந்துள்ளது.

