sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை விவசாயிகள் சங்கம் திட்டம்

/

போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை விவசாயிகள் சங்கம் திட்டம்

போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை விவசாயிகள் சங்கம் திட்டம்

போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை விவசாயிகள் சங்கம் திட்டம்


ADDED : அக் 21, 2024 04:33 AM

Google News

ADDED : அக் 21, 2024 04:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம் : கோவை மாவட்டம் காரமடை அருகே சீலியூரில், நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கம், சார்பில் மாநிலத் தலைவர் பாபு தலைமையில், ஆலோசனை கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் பாபு பேசியதாவது:-

கோவை மாவட்டம் தடாகம் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பன்னிமடையில், போலீசார் விவசாயி ஒருவரின் தோட்டத்திற்குள் சென்று, அங்கு உள்ள தென்னை மரத்திலிருந்து, நீரா பானம் எடுக்கும் மண்பானைகளை உடைத்து சேதப்படுத்தி உள்ளார்கள். மேலும் அங்கு வைத்திருந்த பிளாஸ்டிக் குடங்கள், விவசாயத்திற்கு பயன்படக்கூடிய சில இடுபொருட்கள் அனைத்தையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளார்கள். பணத்தையும் எடுத்து சென்றுள்ளார்கள். அத்து மீறி அடாவடித்தனம் செய்த போலீசாரின் நடவடிக்கையை கண்டிக்கிறோம்.

கடந்த 2009ம் ஆண்டு முதல் நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக, பனை மற்றும் தென்னை மரங்களில் இருந்து நீரா பானம் மற்றும் கள் இறக்க தமிழக அரசிடம் அனுமதி கேட்டு போராடி வருகிறோம். விவசாயிகளை மிரட்டி, தேவையின்றி கடும் நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இது போன்று நடந்தால், போலீஸ் ஸ்டேஷன்களை விவசாய சங்கத்தின் சார்பாக முற்றுகையிடுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us