sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாரியம்மன் தேர்த்திருவிழாவுக்கு முன்கூட்டிய திட்டமிடல் அவசியம்

/

மாரியம்மன் தேர்த்திருவிழாவுக்கு முன்கூட்டிய திட்டமிடல் அவசியம்

மாரியம்மன் தேர்த்திருவிழாவுக்கு முன்கூட்டிய திட்டமிடல் அவசியம்

மாரியம்மன் தேர்த்திருவிழாவுக்கு முன்கூட்டிய திட்டமிடல் அவசியம்


ADDED : பிப் 20, 2025 11:21 PM

Google News

ADDED : பிப் 20, 2025 11:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி; கோவிலுக்கு வரும் பக்தர்கள், முறையாக தங்களது வாகனங்களை நிறுத்தும் வகையில், பார்க்கிங் வசதி ஏற்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.

பொள்ளாச்சியில், ஒவ்வொரு ஆண்டும் மாரியம்மன் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. அவ்வகையில், நடப்பாண்டு கோவில் தேர்த்திருவிழா, கடந்த 11ம் தேதி ேநான்பு சாட்டப்பட்டது.

கடந்த 18 ம் தேதி கம்பம் நடுதலை தொடர்ந்து, தினமும் அபிேஷக ஆராதனை நடத்தப்படுகிறது. அதிகப்படியான பக்தர்கள், கொடிமரத்திற்கு மஞ்சள் தண்ணீர் ஊற்ற வருகின்றனர்.

ஆனால், தரிசனத்திற்கு வரும் பக்தர்கள், கோவில் ஒட்டிய பகுதிகளில் தாறுமாறாக கார் மற்றும் இருசக்கர வாகனங்களை நிறுத்திச் செல்கின்றனர். இதனால், நகர வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

அதேபோல, கூட்டத்தின் நடுவே இருசக்கர வாகனங்கள் இயக்கப்படும் போது, சிறு விபத்துகளும் ஏற்டுகிறது. இதனை தடுக்கும் வகையில், கோவில் ஒட்டிய பகுதி மற்றும் வீதிகள், பள்ளி மைதானத்தை தேர்வு செய்து, வாகனங்களை நிறுத்தும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும், என, வலியுறுத்தப்பட்டுள்ளது.

மக்கள் கூறியதாவது:

கோவிலுக்கு வரும் பக்தர்கள், ஆங்காங்கே தங்களது வாகனங்களை நிறுத்திச் செல்கின்றனர். இதனால், பிறர், தரிசனம் முடித்து விட்டு, வாகனங்களை எடுத்துச் செல்ல முடியாமல் திணறுகின்றனர்.

முறையின்றி நிறுத்தப்படும் வாகனங்களால், போக்குவரத்தும் பாதிக்கிறது. வாகனங்களை முறையாக நிறுத்தும் வகையில் ஏதேனும் ஒரு பகுதியை 'பார்க்கிங்' அமைக்க தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்கு, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, கூறினர்.






      Dinamalar
      Follow us