sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மருத்துவ உபகரணங்களின்றி தனியார் ஆம்புலன்ஸ் இயக்கம்; முறைபடுத்த எதிர்பார்ப்பு

/

மருத்துவ உபகரணங்களின்றி தனியார் ஆம்புலன்ஸ் இயக்கம்; முறைபடுத்த எதிர்பார்ப்பு

மருத்துவ உபகரணங்களின்றி தனியார் ஆம்புலன்ஸ் இயக்கம்; முறைபடுத்த எதிர்பார்ப்பு

மருத்துவ உபகரணங்களின்றி தனியார் ஆம்புலன்ஸ் இயக்கம்; முறைபடுத்த எதிர்பார்ப்பு


ADDED : பிப் 12, 2025 11:05 PM

Google News

ADDED : பிப் 12, 2025 11:05 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி; பொள்ளாச்சி நகரில் இயக்கப்படும் தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களை முறைபடுத்த மருத்துவ பணிகள் மற்றும் வட்டார போக்குவரத்து துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவசர சிகிச்சை மற்றும் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, ஆம்புலன்ஸ் வாகனங்கள், அதிவேகமாக இயக்கப்படுகின்றன.

குறிப்பாக, பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதியில், விபத்து குறித்து ஏதேனும் தகவல் கிடைத்தால், '108' ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு நிகராக, தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களும் போட்டி போட்டு, சம்பவ இடத்துக்கு விரைகின்றன.

நோயாளிகளை தனியார் மருத்துவமனை அழைத்து செல்லவே முனைப்பு காட்டுகின்றனர். ஆனால், பெரும்பாலான வாகனங்களில், அவசர மருத்துவ சிகிச்சைக்கான உபகரணங்கள் இருப்பதில்லை. அவ்வாறு, உபகரணங்கள் இருந்தாலும், செயலிழந்து, பயன்பாடின்றி காணப்படுகின்றன.

இதனால், சில நேரங்களில், உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க முடிவதில்லை. இதை தவிர்க்க, வட்டார போக்குவரத்து துறையினருடன் ஒருங்கிணைந்து, தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களை முறைபடுத்த மருத்துவ பணிகள் துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தன்னார்வலர்கள் கூறுகையில், 'தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களில் உயிர்காக்கும் கருவிகள், அத்தியாவசிய மருந்து பொருட்கள் என, அடிப்படை கட்டமைப்பு இருப்பதை, மருத்துவ பணிகள் துறையினர் உறுதி செய்ய வேண்டும்.

இதேபோல, வட்டார போக்குவரத்து துறையினர், வாகனம் மற்றும் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட முக்கிய விபரங்களைக் கண்காணிக்க வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us