sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வனவிலங்குகளால் பாதிப்பு; 7ம் தேதி ஆர்ப்பாட்டம்

/

வனவிலங்குகளால் பாதிப்பு; 7ம் தேதி ஆர்ப்பாட்டம்

வனவிலங்குகளால் பாதிப்பு; 7ம் தேதி ஆர்ப்பாட்டம்

வனவிலங்குகளால் பாதிப்பு; 7ம் தேதி ஆர்ப்பாட்டம்


ADDED : டிச 01, 2024 11:45 PM

Google News

ADDED : டிச 01, 2024 11:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்; கோவை மாவட்டம் காரமடை ஆதிமதையனூரில், தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பாக நேற்று மாலை வனவிலங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதுகுறித்து தமிழக விவசாய சங்கத்தின் மாநில தலைவர் வேணுகோபால் கூறியதாவது:-

வனவிலங்குகள் பயிர் சேதம் செய்வதோடு, மக்களையும் தாக்கி வருகிறது. இதுவரை இதற்காக விவசாயிகள் மட்டும் போராடி வந்த நிலையில், விவசாயிகளுடன் பொதுமக்களும் ஒருங்கிணைந்து போராடினால் தான் வெற்றி பெற முடியும் என முடிவு செய்யப்பட்டது.

இதற்காக கிராமம் தோறும் வன விலங்குகளிடமிருந்து விவசாயத்தையும், மக்களையும் காப்பாற்றும் இயக்கம் துவங்கப்பட்டது. விவசாயிகளின் சார்பாகவும், பொதுமக்களின் சார்பாகவும் பொறுப்பாளர்கள் இதற்காக நியமிக்கப்பட்டனர்.

வனவிலங்குகள் பிரச்னைக்கு தீர்வு காண வரும் 7ம் தேதி மேட்டுப்பாளையம் தாலுகா அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். பெண்கள் தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.---






      Dinamalar
      Follow us