/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பழங்குடியினருக்கு உணவு வழங்கல்
/
பழங்குடியினருக்கு உணவு வழங்கல்
ADDED : மே 28, 2025 11:57 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, குஞ்சிபாளையம் ஸ்ரீராம ஜெயம் அறக்கட்டளை வாயிலாக, பல்வேறு நிலைகளில் பாதிக்கப்படும் மக்களுக்கு, நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. ஆதரவற்ற முதியோர், மனவளர்ச்சி குன்றியவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பலர் பயனடைந்து வருகின்றனர்.
சின்னார்பதி, கோபால்பதி குடியிருப்பு பகுதிகளில், பருவமழையால் பழங்குடியின மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடுகளை இழந்து தவிக்கும், 300 பேருக்கு, ஸ்ரீராம ஜெயம் அறக்கட்டளை சார்பில் உணவு வழங்கப்பட்டது.