/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பஸ் ஸ்டாண்ட் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
/
பஸ் ஸ்டாண்ட் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
ADDED : டிச 16, 2025 07:35 AM
உடுமலை: உடுமலை அருகே தேவனுார்புதுாரில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலை, பொள்ளாச்சி தாலுகா எல்லையில் தேவனுார்புதுார் ஊராட்சி உள்ளது.
இந்த இரண்டு தாலுகாவிலிருந்தும் டவுன் பஸ்கள் இந்த ஊருக்கு செல்கின்றன.
ஆனால், அங்கு பஸ்கள் நிறுத்த பஸ் ஸ்டாப் மட்டுமே உள்ளது. பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் டவுன் பஸ்கள் இங்கு வருகின்றன. அவை நிறுத்த இடமில்லாமல், ரோட்டிலேயே நிறுத்த வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
இதனால், அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. விபத்துகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, அங்கு பஸ் ஸ்டாண்ட் உடனடியாக அமைக்க ஊராட்சி நிர்வாகமும், உடுமலை ஒன்றிய நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் வாயிலாக, இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும்.

