ADDED : செப் 05, 2026 03:39 AM
அ நிறம் | அளவு
அன்னூர்: அன்னூர் பேரூராட்சியில், சத்தி சாலையிலிருந்து, அல்லிகுளம் செல்லும் வழியில் புதுக் காலனி உள்ளது. இங்கு 15 குடும்பங்கள் வசிக்கும் வீடுகளுக்கு பட்டா வழங்கப்படவில்லை.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'நாங்கள் 15 ஆண்டுகளாக வசித்து வரும் வீட்டு இடத்துக்கு பட்டா கோரி வருவாய் துறையில், 15 ஆண்டுகளாக விண்ணப்பித்து வருகிறோம்.
ஜமாபந்தி, மனுநீதி நாள் முகாம் என பலவற்றிலும் மனு அளித்து விட்டோம். ஒரே வீட்டில் 15 ஆண்டுகளாக குடியிருந்து வருகிறோம். ஆனாலும் எங்கள் வீடுகளுக்கு பட்டா வழங்காமல் வருவாய் துறையினர் இழுத்தடிக்கின்றனர்.
