/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொங்கலை முன்னிட்டு பூசணி விலை கிலோ ரூ.50
/
பொங்கலை முன்னிட்டு பூசணி விலை கிலோ ரூ.50
ADDED : ஜன 14, 2025 09:24 PM
கிணத்துக்கடவு:
கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில் காய்கள் வரத்து மிதமாக இருந்த நிலையில், பொங்கலை முன்னிட்டு விலை உயர்ந்தது.
கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில், தக்காளி (15 கிலோ பெட்டி) --- 210 ரூபாய், தேங்காய் (ஒன்று) --- 27, கத்தரிக்காய் (கிலோ) --- 20, வெண்டைக்காய் --- 25, முள்ளங்கி --- 23, வெள்ளரிக்காய் --- 20, பூசணிக்காய் --- 15, அரசாணிக்காய் --- 15, பாகற்காய் -- 35, புடலை --- 20, சுரைக்காய் --- 20, பீர்க்கங்காய் -- 60, பீட்ரூட் --- 35, அவரைக்காய் --- 60, பச்சை மிளகாய் --- 35 ரூபாய்க்கு விற்பனையானது.
கடந்த வாரத்தை ஒப்பிடுகையில், தக்காளி (15 கிலோ பெட்டி) --- 40, கத்திரிக்காய் (கிலோ) --- 10, வெண்டைக்காய் --- 15, பாகற்காய் --- 5, பச்சை மிளகாய் --- 25 ரூபாய் விலை குறைந்துள்ளது.
தேங்காய் (ஒன்று) --- 4, அரசாணிக்காய் --- 3, பீட்ரூட் மற்றும் அவரைக்காய் --- 5 ரூபாய் விலை அதிகரித்துள்ளது.
வியாபாரிகள் கூறுகையில், 'தினசரி மார்க்கெட்டில் காய்கள் வரத்து இந்த வாரமும் மிகமாகவே இருந்தது. ஒரு சில காய்கள் விலை உயர்ந்து காணப்பட்டது. பொங்கலை முன்னிட்டு, பூசணிக்காய் கிலோ, 15 ரூபாய்க்கு விற்பனையானது. மற்றொரு ரகமான சிகப்பு பூசணிக்காய் கிலோ 45 முதல் 50 ரூபாய்க்கு விற்பனையானது,' என்றனர்.