/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மொண்டிபாளையம் பெருமாள் கோவில் புரட்டாசி திருவிழா
/
மொண்டிபாளையம் பெருமாள் கோவில் புரட்டாசி திருவிழா
ADDED : செப் 28, 2025 11:52 PM

அன்னுார்; அன்னுார் அடுத்த மொண்டிபாளையம் வெங்கடேச பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி, நேற்றுமுன்தினம் அதிகாலை 4:00 மணிக்கு மகா அபிஷேகமும், திருமஞ்சனமும் நடந்தது. வெங்கடேச பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதரராக சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
கோவில் முன்புறம் 500க்கும் மேற்பட்ட தாசர்கள் பெருமாளை சேவித்தபடி சங்கு ஊதி வழிபாடு செய்தனர். பக்தர்கள் பலர் அரிசி, பருப்பை தாசர்களுக்கு படைத்து வணங்கினர். பக்தர்கள் இரண்டு மணி நேரம் வரிசையில் காத்திருந்து பெருமாளை வணங்கினர். இரவு 8:00 மணிக்கு கருட வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதரராக வெங்கடேச பெருமாள் தேரோடும் வீதி வழியாக திருவீதியுலா வந்து அருள்பாலித்தார்.
திருப்பூர், கோவை, மேட்டுப்பாளையம் மற்றும் புளியம்பட்டியில் இருந்து அரசு போக்குவரத்துக் கழக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.