/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவில்களில் புரட்டாசி சனி பூஜை
/
கோவில்களில் புரட்டாசி சனி பூஜை
ADDED : செப் 28, 2025 11:22 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வால்பாறை; வால்பாறை அடுத்துள்ள கருமலை பாலாஜி கோவிலில், புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு பூஜை நடந்தது.
காலை, 4:00 மணிக்கு கணபதி ஹோமமும், 5:00 மணிக்கு பால், மஞ்சள், குங்குமம், இளநீர், சந்தனம்,பன்னீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு, பெருமாளுக்கு அபிேஷக பூஜை நடந்தது. காலை, 6:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் தேவியருடன் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விநாயகர், ஆஞ்சநேயர், மாரியம்மன் ஆகியோருக்கும் சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடந்தன. அதன்பின், பெருமாள் தேவியருடன் தேரில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து அருள்பாலித்தார். பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் பஜனை பாடல்கள் பாடினர்.