/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தென்திருப்பதியில் புஷ்ப யாக வைபவம்
/
தென்திருப்பதியில் புஷ்ப யாக வைபவம்
ADDED : நவ 09, 2024 11:34 PM

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் ஜடையம்பாளையம் தென்திருப்பதி ஸ்ரீவாரி ஆலயத்தில், புஷ்ப யாக வைபவ நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடந்தது.
ஜப்பசிமாத திருவோணத்தை முன்னிட்டு, நேற்று பெருமாளுக்கு புஷ்ப யாகம் நடந்தது. முன்னதாக, அதிகாலை 4 மணிக்கு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு, விஸ்வரூப தரிசனம், புண்ணியாக வாசனம், பூர்ணாஹுதி நடத்தப்பட்டு, கோவில் முன் மண்டபத்தில் ஸ்ரீ மலையப்பசுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளினார்.
தொடர்ந்து, சிறப்பு யாகம் நடத்தப்பட்டு, மலையப்பசுவாமி மற்றும் ஸ்ரீதேவி, பூதேவிக்கு புஷ்பாஞ்சலி வைபவம் நடந்தது. செண்பகம், தாழம்பூ, தாமரை, அரளி, செவ்வந்தி, சாமந்தி, ரோஜா, மல்லிகை, முல்லை உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்ட மலர்களை கொண்டு பெருமாளுக்கு வேத மந்திரங்கள் ஓதி, புஷ்பாஞ்சலி நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, மலையப்பசுவாமியை வணங்கி அருளாசி பெற்றனர்.