sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் பாடத்திட்டத்தில் இல்லாத கேள்வி கேட்கக்கூடாது: அண்ணாமலை

/

டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் பாடத்திட்டத்தில் இல்லாத கேள்வி கேட்கக்கூடாது: அண்ணாமலை

டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் பாடத்திட்டத்தில் இல்லாத கேள்வி கேட்கக்கூடாது: அண்ணாமலை

டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் பாடத்திட்டத்தில் இல்லாத கேள்வி கேட்கக்கூடாது: அண்ணாமலை


ADDED : ஜூலை 24, 2025 10:29 AM

Google News

ADDED : ஜூலை 24, 2025 10:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4' தேர்வில், தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து, மறுதேர்வு நடத்த வேண்டும்; பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகள் தேர்வில் கேட்காமல் இருக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:



'டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4' தேர்வில், மொத்தம் 200 கேள்விகளில், தமிழ் பாடத்திற்கு மட்டும், 100 கேள்விகள் உள்ளன. இம்மாதம், 7ம் தேதி நடத்தப்பட்ட தேர்வில், தமிழ் பாடத்திட்டத்தில் கேட்கப்பட்ட, 100 கேள்விகளில், 50க்கும் மேற்பட்டவை, பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகள். புரியாதபடி, மிகவும் சிக்கலான கேள்விகள் கேட்கப்பட்டதாக, தேர்வர்கள் தெரிவித்துள்ளனர்.

எதிர்மறை மதிப்பெண்இல்லை என்பதால், அனைத்து தேர்வாளர்களும், ஏதோ ஒரு விடையை தேர்வு செய்திருக்கின்றனர். இதனால் தேர்வுக்கு கடினமாக உழைத்து தயாரானவர்களும், இறுதியில்அதிர்ஷ்டம் இருந்தால் தான் வெற்றிபெற முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பல ஆண்டுகளாக, அரசு வேலைக்கு தங்கள் நேரத்தையும், கடின உழைப்பையும் கொடுத்து, பாடுபட்ட இளைஞர்கள், இறுதியில் பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகளால், தங்கள் வாய்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டிருப்பது வருத்தத்துக்கு உரியது. இது, தவிர்க்கப்பட வேண்டியது.

அரசு வேலை என்று கனவுகளோடு, தேர்வுக்கு தயாரான இளைஞர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகளை கேட்டு, யாரோ செய்த தவறுக்காக பலியாக்குவதில் நியாயமில்லை. எனவே, 'குரூப் - 4' தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து, மறுதேர்வு நடத்த வேண்டும். அல்லது பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகளுக்கான மதிப்பெண்களை, அனைத்து மாணவர்களுக்கும் சமமாக வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us