நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி,; பொள்ளாச்சி மீனாட்சிபுரம் ரயில் பாதையில், பராமரிப்பு பணிகளுக்காக ரயில்வே கேட்மூடப்பட்டுள்ளது.இதனால், மக்கள் பெரியபோது வழித்தடத்தை பயன்படுத்திக்கொள்ளாலம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொதுவாக, மக்கள் நீண்ட துாரம் வெளியூர் செல்வதற்கு பெரும்பாலும் ரயில்களையே பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பொள்ளாச்சி -அருகே, மீனாட்சிபுரம் ரயில் பாதையில், பொள்ளாச்சி - கோவிந்தாபுரம் ரயில்வேகேட் (எல்.சி., நம்பர், 14) அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்வே கேட் பராமரிப்பு பணி, நேற்று இரவு, 10:00 மணி முதல் துவங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து நாளை (8ம் தேதி) இரவு, 10:00 மணி வரை பணி மேற்கொள்வதால் ரயில்வே கேட்மூடப்படுகிறது.இதற்கு மாற்றாக, கோவிந்தாபுரம் - பெரியபோது வழித்தடத்தை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என, தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.