sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 ரயில்வே சுரங்கபாதை வாகனங்களுக்கு அனுமதி

/

 ரயில்வே சுரங்கபாதை வாகனங்களுக்கு அனுமதி

 ரயில்வே சுரங்கபாதை வாகனங்களுக்கு அனுமதி

 ரயில்வே சுரங்கபாதை வாகனங்களுக்கு அனுமதி


ADDED : ஜன 01, 2026 05:11 AM

Google News

ADDED : ஜன 01, 2026 05:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கவுண்டம்பாளையம் - மணியகாரன்பாளையத்தை இணைக்கும் நல்லாம்பாளையம் ரயில்வே சுரங்கபாதையின் ஒரு பகுதியில், வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கோவை மணியகாரன்பாளையம், கணபதியில் இருந்து கவுண்டம்பாளையம் செல்ல நல்லாம்பாளையம் ரயில்வே சுரங்கபாதை பயன்பட்டு வருகிறது. மழைகாலங்களில் இந்த ரயில்வே சுரங்கபாதையில் நீர் தேங்குவதால், போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

மேட்டுப்பாளையம் ரோட்டில், தற்போது மேம்பாலப்பணிகள் நடந்து வருகின்றன. இதன் காரணமாக காந்திபுரம், பூமார்கெட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கவுண்டம்பாளையம் செல்லும் பஸ்கள் கண்ணப்பன் நகர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன.

இப்பஸ்கள் இந்த ரயில்வே சுரங்கப்பாதைவழியாக செல்கின்றன. இந்நிலையில் ரயில்வே நிர்வாகம் சார்பில், அப்பகுதியில் உள்ள இரும்பு துாண் மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் காரணமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பணிகள் நடப்பதால் அப்பகுதியில் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது.இந்நிலையில், வாகன ஓட்டிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு பாலத்தின் ஒரு பகுதியில் வாகன போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும் பஸ்கள் மாற்றுப்பாதையில் தொடர்ந்து இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us