ADDED : ஆக 25, 2026 08:13 PM
அ நிறம் | அளவு
கோவை: ஆர்.எஸ்.புரம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயிலில் நேற்று மாலை வளர்பிறை பிரதோஷ வைபவம் நடந்தது. மாலை 4.30 மணிக்கு ஸ்ரீ சந்திரமவுலீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார மற்றும் ஆராதனை நடந்தது.
நந்தியெம்பெருமான் மீது அம்பாள் சமேதராக சந்திரமவுலீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். திரளானோர் தரிசித்தனர்.
