sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஓர் ஆண்டில் ஒரு கோடி ரூபாய் அபராதம் வசூலிப்பு வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தகவல்

/

ஓர் ஆண்டில் ஒரு கோடி ரூபாய் அபராதம் வசூலிப்பு வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தகவல்

ஓர் ஆண்டில் ஒரு கோடி ரூபாய் அபராதம் வசூலிப்பு வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தகவல்

ஓர் ஆண்டில் ஒரு கோடி ரூபாய் அபராதம் வசூலிப்பு வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தகவல்


ADDED : ஜன 08, 2025 11:01 PM

Google News

ADDED : ஜன 08, 2025 11:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி, ; 'பொள்ளாச்சி பகுதியில் கடந்த ஒரு ஆண்டில், வரி மற்றும் வசூலிக்கப்பட்ட அபராத தொகையாக, 1 கோடியே, 12 லட்சத்து, 84ஆயிரத்து,298ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது,' என வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜ் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் கோகுலகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய குழுவினர், வாகன தணிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

போக்குவரத்து விதிமுறை மீறல், வரி செலுத்தாத வாகனங்களுக்கு அபராதம் மற்றும் வரி வசூல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

கடந்த ஒரு ஆண்டில், 1944 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டுள்ளன. வரி மற்றும் அபராதத்தொகையாக ஒரு கோடியே, 12 லட்சத்து, 84 ஆயிரத்து, 292 ரூபாய் வசூலிக்கப்பட்டது.

கடந்த ஓர் ஆண்டில், 427 விபத்துகள் நடந்துள்ளன. காயமடைந்தவர்கள், 473 பேர், உயிர் இழந்தவர்கள் எண்ணிக்கை, 94 பேராகும். மொத்தம், 729 வாகனங்கள் சேதமடைந்துள்ளன.

விழிப்புணர்வு தேவை


வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது:

விபத்தில்லா பயணம் செய்ய அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ெஹல்மெட் அணிந்து வாகனங்களை ஓட்ட வேண்டும். கார்களை இயக்கும் போது, 'சீட் பெல்ட்' கட்டாயம் அணிய வேண்டும். இதனால் விபத்துக்களை தவிர்க்கலாம்.

மேலும், வாகன ஓட்டுனர்கள், அதிவேகமாக, அஜாக்கிரதையாக செல்வதை தவிர்த்தால் விபத்துக்களை கட்டுப்படுத்த முடியும்.

இது குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், அபராதம் விதிப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதால் கடந்த, 2023ம் ஆண்டை விட, கடந்தாண்டு விபத்து எண்ணிக்கை குறைந்துள்ளது.

மேலும், விபத்துகளை குறைக்க உரிய விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். போக்குவரத்து விதிமுறை மீறினால் அபராதம் விதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

உயிர் இழப்பு ஏற்படும் வகையில் விபத்து ஏற்படுத்துபவர்களின் லைசென்ஸ் தற்காலிக ரத்து செய்ய முடியும்.

எனவே, வாகனங்களை இயக்குவோர் பாதுகாப்பாக இயக்க வேண்டும். விதிமுறைகளை பின்பற்றுவதால், விபத்துகளை தவிர்த்து பாதுகாப்பாக செல்ல வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us