/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின்கம்பங்கள் சேதம் பராமரிக்க கோரிக்கை
/
மின்கம்பங்கள் சேதம் பராமரிக்க கோரிக்கை
ADDED : செப் 29, 2025 10:33 PM

பொள்ளாச்சி:
பொள்ளாச்சி சி.டி.சி. மேட்டில் இருந்து வடுகபாளையம் செல்லும் ரோட்டில் மின்கம்பங்கள் பராமரிப்பின்றி உள்ளதால், விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில், மின் கோட்டத்திற்கு உட்பட்ட ஒவ்வொரு துணை மின்நிலையங்களில், மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இப்பணியின்போது, மின் கம்பிகள், மின் கம்பங்களின் உறுதித் தன்மை சரிபார்க்கப்படுகிறது.
இத்துடன், மின் கம்பிகள் செல்லும் பாதையில், இடையூறாக உள்ள மரம், செடி உள்ளிட்டவை அகற்றப்படுகின்றன. எனினும், சில பகுதிகளில், சிதிலமடைந்து ஆபத்தான நிலையில், மின் கம்பங்கள் காணப்படுகின்றன.
அதில், பொள்ளாச்சி சி.டி.சி. மேட்டில் இருந்து வடுகபாளையம் செல்லும் ரோட்டில், மின்கம்பங்கள் பராமரிப்பின்றி உள்ளது. இதனால், வாகன ஓட்டுநர்கள் அச்சத்துடன் பயணிக்கும் நிலை உள்ளது. இது குறித்து ஆய்வு செய்து, சேதமடைந்த மின்கம்பங்களை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.