sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன் வழங்க கோரிக்கை

/

பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன் வழங்க கோரிக்கை

பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன் வழங்க கோரிக்கை

பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன் வழங்க கோரிக்கை


ADDED : பிப் 04, 2025 11:51 PM

Google News

ADDED : பிப் 04, 2025 11:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை; பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டுமென, சத்துணவு பணியாளர்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தமிழ்நாடு சத்துணவு பணியாளர் ஒன்றியம், வால்பாறை நிர்வாகிகள் கூட்டம், மாவட்ட பொறுப்பாளர் லில்லிஹில்டா தலைமையில் நடந்தது. கூட்டத்தில் வால்பாறை ஒன்றியத்தின் பொறுப்பாளராக சோபியா, செயலாளராக தேவகுமாரி, பொருளாளராக பேபி, ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

கூட்டத்தில், வால்பாறை மலைப்பகுதியில் பல்வேறு சிரமத்திற்கு இடையே பணிபுரியும் சத்துணவு பணியாளர்களுக்கு, குறிப்பிட்ட தேதியில் மாதம் தோறும் ஊதியம் வழங்க வேண்டும்.

சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சமையலர், உதவியாளர் பணியிடங்களை தமிழக அரசு உடனடியாக நிரப்ப வேண்டும். பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள், உதவியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us