sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

விதிமீறலை தடுத்து கோர்ட் உத்தரவை அமல்படுத்த கலெக்டருக்கு கோரிக்கை 

/

விதிமீறலை தடுத்து கோர்ட் உத்தரவை அமல்படுத்த கலெக்டருக்கு கோரிக்கை 

விதிமீறலை தடுத்து கோர்ட் உத்தரவை அமல்படுத்த கலெக்டருக்கு கோரிக்கை 

விதிமீறலை தடுத்து கோர்ட் உத்தரவை அமல்படுத்த கலெக்டருக்கு கோரிக்கை 


ADDED : ஜூன் 09, 2025 10:27 PM

Google News

ADDED : ஜூன் 09, 2025 10:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவை மாநகராட்சி எல்லைக்குள், கட்டட விதிமீறல்கள் அனைத்தையும் தடுத்து நிறுத்த வழிவகுக்கும் வகையில், சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, அமல்படுத்த வேண்டும் என்று, ஊழல் எதிர்ப்பு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து, ஊழல் எதிர்ப்பு இயக்க செயலாளர் வேலு, கலெக்டரிடம் அளித்த மனு:

கட்டட விதிமீறல்களை தடுக்க, கலெக்டர் தலைமையில் மாவட்ட கண்காணிப்பு குழுவை ஏற்படுத்த வேண்டும். கோர்ட் உத்தரவின்படி, இதன் வாயிலாக முறைகேடுகள் அனைத்தையும் முடிவுக்கு கொண்டு வந்திருக்க வேண்டும்.

ஆனால், சென்னை உயர்நீதிமன்றம், உத்தரவு பிறப்பித்து ஓராண்டுக்கு மேலாகியும், இதுவரை கண்காணிப்புக் குழு அமைக்கப்படவில்லை.

கலெக்டரும், மாநகராட்சி கமிஷனரும் ஐ.ஏ.எஸ்.,அதிகாரிகளாக இருப்பதால், கோர்ட் உத்தரவுகளை உடனடியாக நிறைவேற்றி, மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.

உயர்நீதி மன்றத்தின் உத்தரவை நிறைவேற்றாமல் இருப்பது, தங்கள் கடமையை மீறுவதாகவும், அது சட்டத்தை மீறுபவர்களுக்கு உடந்தையாக இருந்து, உறுதுணை புரிந்த ஊழலுக்கு உடன்படும் செயலாகவும் கருதப்படும்.

ஆகவே, உயர் நீதிமன்ற உத்தரவு மற்றும் அது தொடர்பான அரசாணையை, மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு, அந்த மனுவில் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us