/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முள்ளம்பன்றியை மீட்டு வனத்தில் விடுவிப்பு
/
முள்ளம்பன்றியை மீட்டு வனத்தில் விடுவிப்பு
ADDED : அக் 05, 2025 11:36 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, கிராமத்தில் சுற்றித்திரிந்த முள்ளம்பன்றியை வனத்துறையினர் மீட்டு, வனப்பகுதியில் விட்டனர்.
பொள்ளாச்சி வனப்பகுதியில் வழி தவறி வந்த முள்ளம்பன்றி, குஞ்சிபாளையம் கிராமத்தில் கடந்த சில நாட்களாக உலா வருகிறது. பகலில் புதருக்குள் இருக்கும் முள்ளம்பன்றி, நள்ளிரவு, அதிகாலை நேரங்களில் வெளியே வருகிறது.
இது குறித்து, அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை ஊழியர்கள், முள்ளம்பன்றி நடமாட்டம் குறித்து ஆய்வு செய்தனர். புதருக்குள் இருந்த முள்ளம்பன்றியை பிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், நேற்று வனத்துறை ஊழியர்கள், சம்பவ இடத்துக்கு சென்று முள்ளம்பன்றியின் நடமாட்டத்தை கண்காணித்து, ஒன்றரை மணி நேரம் போராடி பிடித்து, ஆழியாறு வனப்பகுதியில் விட்டனர்.