sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சொன்னபடி செயல்படாத மாநகராட்சி நிர்வாகம் வெள்ளலுார் பகுதி பொதுமக்கள் குற்றச்சாட்டு

/

சொன்னபடி செயல்படாத மாநகராட்சி நிர்வாகம் வெள்ளலுார் பகுதி பொதுமக்கள் குற்றச்சாட்டு

சொன்னபடி செயல்படாத மாநகராட்சி நிர்வாகம் வெள்ளலுார் பகுதி பொதுமக்கள் குற்றச்சாட்டு

சொன்னபடி செயல்படாத மாநகராட்சி நிர்வாகம் வெள்ளலுார் பகுதி பொதுமக்கள் குற்றச்சாட்டு


ADDED : மே 04, 2025 11:00 PM

Google News

ADDED : மே 04, 2025 11:00 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை, ;வெள்ளலுார் குப்பை கிடங்கில், 'இனி கோழிக் கழிவுகளை புதைக்கமாட்டோம்' என உறுதியளித்த மாநகராட்சி நிர்வாகம், விதிமீறி வருவதாக அப்பகுதி மக்கள் கொந்தளிக்கின்றனர்.

கோவை மாநகராட்சியின், 100 வார்டுகளிலும் தினமும், 1,250 டன் வரையிலான குப்பை சேகரமாகிறது. இக்குப்பையானது கடந்த, 20 ஆண்டுகளுக்கும் மேலாக வெள்ளலுார் குப்பை கிடங்கில், மலை போல் குவிக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் அனுபவிக்கும் பிரச்னைகள் கொஞ்ச நஞ்சமல்ல.

பனி காலத்தில் துர்நாற்றம், வெயில் காலத்தில் தீவிபத்து, ஈ தொல்லை என மாறி, மாறி வாட்டி வதைத்துவருகிறது.

பிரச்னை தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் வரை சென்று விசாரணையும் நடக்கிறது. அந்தந்த மண்டலங்களிலேயே, குப்பை மேலாண்மை செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர்.

தற்போது, இறைச்சி கழிவுகளும் இம்சையை கூட்டியுள்ளது. மாநகரில் சேகரமாகும் இறைச்சிக் கழிவுகளை குப்பை கிடங்கு வளாகத்தில் குழி தோண்டி புதைப்பதால், நிலத்தடி நீர் பாதிக்கக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக, அப்பகுதி மக்கள் குமுறுகின்றனர்.

இதுதொடர்பாக, குறிச்சி-வெள்ளலுார் மாசு தடுப்பு கூட்டுக்குழுவினர், 'மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியின்றி, இறைச்சி கழிவுகளை ஏற்றி செல்லும் தனியார் நிறுவன வாகனங்களுக்கு தடை விதிப்பதோடு, சுகாதாரமற்ற வகையில் ரத்தக்கறை படிந்த கோழி கழிவுகளை தேக்கி வைக்கும் மாநகராட்சி மீதும், நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் முறையிட்டுள்ளனர்.

குறிப்பாக, இறைச்சி கழிவுகளை அந்தந்த இடத்திலேயே மேலாண்மை செய்ய மாநகராட்சிக்கு உத்தரவிடவும் மனு அளித்துள்ளனர்.

இல்லை!

குறிச்சி-வெள்ளலுார் மாசு தடுப்புக் கூட்டுக்குழு செயலாளர் மோகன் கூறுகையில், ''கோழி கழிவுகளை இனி வெள்ளலுார் குப்பை கிடங்கில் புதைக்கமாட்டோம் என மாநகராட்சி கமிஷனர் தெரிவித்திருந்தார். ஆனால், அதையும் மீறி புதைக்கப்பட்டு வருகிறது. இன்று (நேற்று) மட்டும், 30 முதல், 35 டன் வரை இறைச்சி கழிவுகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இதனால், பாதிக்கப்படுவது மக்கள்தான் என்பதை மாநகராட்சி எப்போது உணரப்போகிறது,'' என்றார்.








      Dinamalar
      Follow us